Categories: சினிமா

நான் செய்த ரகளையால் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட பாரதிராஜா…  வடிவுக்கரசி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வடிவுக்கரசி. படித்துக் கொண்டிருந்த போதே வீட்டுக்குத் தெரியாமல் அந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். ஆனால் அவரின் வித்தியாசமான மிடுக்கான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. அதன் பின்னர் பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இப்போது வரை அசத்தி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வடிவுக்கரசி எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்தன. சிவப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை மற்றும் கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவரின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இந்நிலையில் பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் அவருக்கு கதாபாத்திரம் கொடுக்காததால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சண்டை போட்டாராம். இது பற்றி சாய் வித் சித்ரா நேர்காணலில் பேசிய அவர் “கிழக்குச் சீமையிலே படத்தில் விஜயகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என சொல்லி என அழைத்தனர். மறுநாள் எனக்கு பிறந்தநாள் என்பதால் நான் தயங்கியபடியே, திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே சென்றேன்.

அங்கே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றால் திடீரென்று எனக்கு வேடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அது எனக்கு பயங்கர கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நான் இயக்குனரை கடுமையாக கோபித்துக் கொண்டு சண்டை போட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டே ரணகளம் ஆகிவிட்டது. நான் பண்ணிய ரகளையைப் பார்த்து பாரதிராஜா சார் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார். நம் இயக்குனரின் படத்தில் நமக்கு வேடம் இல்லை என்று சொல்லிவிட்டார்களே என்ற கோபம்தான் எனக்கு.

அதன் பின்னர் அவர் இயக்கிய கருத்தம்மா திரைப்படத்தில் எனக்கு நல்ல வேடம் கொடுத்தார். நானும் போய் நடித்தேன். அப்புறம் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

7 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

10 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

12 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

25 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

27 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

27 minutes ago