அமெரிக்காவுடன் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால், ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்து வரும் சூழலில், ட்ரம்பின் இந்த மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இறுதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ராணுவத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இத்துடன், ஒருவேளை போர் தவிர்க்கப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால், அதற்குப் பிரதிபலனாக அந்த நாடுகளின் ஒட்டுமொத்த வருவாயில் 20 சதவீதத்தை அமெரிக்காவுக்குப் பங்காக வழங்க வேண்டும் என்ற புதிய திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன . பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதற்கு ஈடாகப் பெருந்தொகையைக் கோரும் ட்ரம்பின் இந்த அதிரடித் திட்டம் உலக நாடுகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…
தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…