#BREAKING: இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா.. 100க்கும் மேற்பட்டோர் பலி.. பெரும் பதற்றம்..!!

Spread the love

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026’ (MILAN 2026) பன்னாட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பல், இன்று (மார்ச் 4, 2026) அதிகாலை இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட டார்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கடற்பரப்பில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்தபோது கப்பலில் சுமார் 180 வீரர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குள்ளான கப்பலில் இருந்து அவசர கால உதவி கோரிக்கை (Distress Call) விடுக்கப்பட்டதை அடுத்து, இலங்கை கடற்படை உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கியது. இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு விமானத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், இதுவரை 32 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் காலி (Galle) பகுதியில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், கடலில் மூழ்கிய 100-க்கும் மேற்பட்ட வீரர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எதிரி நாட்டின் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ மூலம் மூழ்கடிக்கப்படுவது இதுவே முதல் முறை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த அதிரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கடல்வழிப் பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.

Soundarya

Recent Posts

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

8 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

9 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

12 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

27 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

33 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

36 minutes ago