தாய்லாந்துப் பள்ளியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்படியே உறைந்து நின்ற காணொளி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கியதும், தனது ஒரு காலைத் தூக்கிய நிலையிலேயே அசையாமல் அந்தச் சிறுவன் நின்றது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் இவ்வளவு சிறிய வயதில் நாட்டின் மீதும் அதன் அடையாளங்கள் மீதும் அந்தச் சிறுவன் காட்டிய இந்த அதீத மரியாதை இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. இந்தக் காணொளியைக் கண்ட பலரும் அச்சிறுவனின் தேசபக்தியை “தேசிய உணர்வின் வெளிப்பாடு” என்று பாராட்டி வருகின்றனர்.
A post shared by TV1 INDIA खबरों का नया अड्डा* (@tv1indialive)
“>
இந்நிலையில் “யாரோ ஒருவர் அந்தச் சிறுவனை அப்படியே ‘பாஸ்’ செய்தது போல் இருந்தது” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விதிமுறைகளை இயந்திரத்தனமாகப் பின்பற்றாமல், உணர்வுப்பூர்வமாக மதிக்கும் அந்தச் சிறுவனின் செயல், இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…