தாய்லாந்துப் பள்ளியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது ஒரு சிறுவன் ஓடிக்கொண்டிருந்த நிலையிலேயே அப்படியே உறைந்து நின்ற காணொளி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கியதும், தனது ஒரு காலைத் தூக்கிய நிலையிலேயே அசையாமல் அந்தச் சிறுவன் நின்றது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மேலும் இவ்வளவு சிறிய வயதில் நாட்டின் மீதும் அதன் அடையாளங்கள் மீதும் அந்தச் சிறுவன் காட்டிய இந்த அதீத மரியாதை இணையவாசிகளின் மனதை வென்றுள்ளது. இந்தக் காணொளியைக் கண்ட பலரும் அச்சிறுவனின் தேசபக்தியை “தேசிய உணர்வின் வெளிப்பாடு” என்று பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்நிலையில் “யாரோ ஒருவர் அந்தச் சிறுவனை அப்படியே ‘பாஸ்’ செய்தது போல் இருந்தது” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். விதிமுறைகளை இயந்திரத்தனமாகப் பின்பற்றாமல், உணர்வுப்பூர்வமாக மதிக்கும் அந்தச் சிறுவனின் செயல், இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாகப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
