ஈராக்கிய வான்பரப்பில் அமெரிக்காவின் அதிநவீன F-15 ரகப் போர் விமானம், ஈரானின் மலிவான ‘ஷாஹெட்’ ஆளில்லா விமானங்களைத் (Drones) துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், வெறும் 20,000 டாலர் மதிப்புள்ள ஈரானிய ட்ரோன்களை இடைமறிக்கத் தவறிவிட்டதாக ஈரான் ஆதரவு கணக்குகள் இந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றன. அந்த வீடியோவில், ட்ரோன்களைத் துரத்திய போர் விமானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தரையில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுப் புகை மூட்டம் எழுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள பிரிட்டிஷ் என்ஜின் ஆயில் நிறுவனமான ‘காஸ்ட்ரோல்’ ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சர்தார் குழுமத்தால் இயக்கப்படும் இந்த ஆலை மீது மூன்று ட்ரோன்கள் அடுத்தடுத்துத் தாக்கியதில், அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஐக்கிய இராச்சியத்திற்கான ஈரான் தூதர் சையத் அலி மூசாவி, பிரிட்டிஷ் தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில், அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ இந்த ட்ரோன் தாக்குதல் மற்றும் F-15 விமானத்தின் தோல்வி குறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீதும் ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிநவீன போர் விமானங்களால் ஈரானின் குறைந்த விலை ட்ரோன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லையா என்ற கேள்வி ராணுவ ஆய்வாளர்களிடையே எழுந்துள்ளது.
சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி…
விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…
இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…
'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…