பெங்களூரு மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (MAHE) படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிரகாசமான எதிர்காலத்திற்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பெங்களூருவிற்கு படிக்க அனுப்பியதாகவும், ஆனால் தற்போது பிணமாகத்தான் மகனைப் பார்க்க முடிந்தது என்றும் அவரது தந்தை அஞ்சனி குமார் மிஸ்ரா மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததும் பதறியடித்துக்கொண்டு பெங்களூரு விரைந்த தந்தை, தனது மகனின் உடலைப் பார்த்த பிறகு இது தற்கொலையோ அல்லது விபத்தோ அல்ல என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 9-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும், மகனின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் சூழ்நிலைகள் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மணிப்பால் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தச் சம்பவத்தில் ஒளிவுமறைவின்றி உண்மையை வெளிக்கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் என்றும், தனது மகனின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை உடைக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…