பெங்களூரு மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (MAHE) படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் பிரகாசமான எதிர்காலத்திற்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து பெங்களூருவிற்கு படிக்க அனுப்பியதாகவும், ஆனால் தற்போது பிணமாகத்தான் மகனைப் பார்க்க முடிந்தது என்றும் அவரது தந்தை அஞ்சனி குமார் மிஸ்ரா மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்ததும் பதறியடித்துக்கொண்டு பெங்களூரு விரைந்த தந்தை, தனது மகனின் உடலைப் பார்த்த பிறகு இது தற்கொலையோ அல்லது விபத்தோ அல்ல என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 9-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும், மகனின் உடலில் உள்ள காயங்கள் மற்றும் சூழ்நிலைகள் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
🚨Heartbreaking Plea: Grieving Brahmin Father Accuses Bengaluru University of Foul Play
Apeal : Anjani Kumar Mishra, a Brahmin father from Ranchi, Jharkhand, sent his son to Manipal University MAHE Bengaluru for a bright future -only to receive news of his death.
Father’s… pic.twitter.com/R0qLt7qzzK
— Ramesh Tiwari (@rameshofficial0) April 8, 2026
இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மணிப்பால் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தச் சம்பவத்தில் ஒளிவுமறைவின்றி உண்மையை வெளிக்கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் என்றும், தனது மகனின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை உடைக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டுள்ளார்.
