விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்று 83 வது நாள் சனிக்கிழமை எபிசோடு நடைபெற இருக்கிறது. கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள்.
இந்த வாரம் குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
இதுவரை பிக் பாஸ் சீசனில் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது நேற்று சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்த காட்சி நடைபெற்றது. இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருணின் காதலியான அர்ச்சனா உள்ளே வந்திருந்தார். இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பார்க்கும்போது பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களமாக மாறிவிட்டது போல் தெரிந்தது.
இன்று வார இறுதி விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து இன்று ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதுவரை கிடைத்த தகவலின்படி இன்று அன்ஷிதா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.