“அரசன் நட்ட முள் செடி…. உங்களுக்கு பின்னாடி நடக்கும் பெரிய சதி”…. சி.எம். விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!

Spread the love

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யை தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர் அருகில் இருக்கும் “குள்ளநரி கும்பல்” முதலமைச்சர் பதவியைப் பிடிக்கத் திட்டம் போட்டு வருவதாக அப்பாவு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மைக்காலமாக தவெக தலைவர்கள் விஜய்யின் செல்வாக்கு வட மாநிலங்களிலும் உயர்ந்து வருவதாகவும், அவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவார் என்றும் பேசி வரும் நிலையில், அப்பாவின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவு தனது பதிவில், சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த விஜய், தற்போது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜகவின் ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வருவதாகச் சாடியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று ஒரு அமைச்சர் பேசியபோது, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அதைத் தடுத்துக் கேட்காமல் மேஜையைத் தட்டி ரசித்தது வேடிக்கையாகவும் கேவலமாகவும் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தேசிய அரசியல் ஆசையைக் காட்டி விஜய்யை பதவியில் இருந்து நீக்க நடக்கும் சதியை அவர் உணர்ந்துள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்” என்ற வடஇந்திய பழமொழியைச் சுட்டிக்காட்டிய அப்பாவு, பொய்யான தகவல்களை ரீல்ஸ்களாக மாற்றிப் பரப்பும் கலாச்சாரத்தை அரசு தொடங்கி வைத்துள்ளதாகக் கூறினார். தவெக அடிமட்ட தொண்டர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இதைப் பின்பற்றுவதாகவும், சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட போலிக் கணக்குகள் (Fake ID) மூலம் ரீல்ஸாக வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இறுதியாக, தவெக ஆட்சியில் இலவச மருத்துவ சிகிச்சை, உடனடி மரண தண்டனை போன்ற பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில் பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தியில் ரீல்ஸ் தயாரித்து பரப்பி வருவதாக அப்பாவு குறிப்பிட்டுள்ளார். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் தவெகவின் இந்த நடவடிக்கைகளை இந்தியாவே பார்த்து சிரிப்பதாகவும், பொய் ரீல்ஸ்களைப் பரப்பும் போலிக் கணக்குகள் மீது நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை வாங்கித் தர மக்கள் தயாராகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

29 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

29 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

40 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

49 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

52 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

59 minutes ago