“அவர் உயிரோடு இருந்தா என் குடும்பம் சேராது!”… 13 வருட தாம்பத்யம்.. குறுக்கே வந்த மாமியாரை ஒரே சீவு… மருமகன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!

Spread the love

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடும்பத் தகராறில் மாமியாரை மருமகன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் என்பவருக்கும், தஸ்லீமா பேகம் என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 4 மாதங்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தஸ்லீமா தனது குழந்தைகளுடன் உடுமலை அமராவதியில் உள்ள தாய் ஆசியம்மாள் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கு தங்கியிருந்தபடியே அவர் தனது கணவரை விவாகரத்து செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தன் மனைவியையும் குழந்தைகளையும் மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பிய அஜ்மத் உசேன், கடந்த 16-ம் தேதி இரவு அமராவதியில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமாவும் குழந்தைகளும் வீட்டில் இல்லாத நிலையில், மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் கேட்டபோது, அதற்கு ஆசியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியாரைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

பலத்த காயமடைந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அமராவதி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தலைமறைவான அஜ்மத் உசேனைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, குதிரையாறு சோதனைச்சாவடி அருகே பதுங்கியிருந்த அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே உறைய வைத்துள்ளது.

“நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டேன், ஆனால் என் மாமியார்தான் அவளைத் தடுத்து வந்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்று கருதி, ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்” என்று அஜ்மத் உசேன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு சாதாரண குடும்பத் தகராறு, ஒரு பெண்ணின் உயிரைப் பறித்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ள இச்சம்பவம் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அஜ்மத் உசேன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

19 seconds ago

“திமுகவா? அதிமுகவா?”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ஆட்சியை தீர்மானிக்கப் போகும் அந்த 43 இடங்கள்.. தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் முடிவுகள்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

2 minutes ago

“என் வயிற்றில் பிறந்த துரோகி” அவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க… ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல்நிலை பாதிப்பு காரணமாகத் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், சமூக வலைதளங்கள்…

3 minutes ago

மீண்டும் Work From Home?… கொரோனாவை விட மோசமான எரிசக்தி போர்…. ஐரோப்பாவையே உலுக்கிய ‘4 As’ ஃபார்முலா… இந்தியாவிலும் இனி இதுதான் கதியா..?

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…

6 minutes ago

நாடே ஷாக்..! 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

6 minutes ago

“திமுகவுக்கு அடித்த லக்கி பிரைஸ்!” – கடைசி நேரத்தில் ஓவைசி செய்த அந்த ஒரு செயல்… தமிழக தேர்தலில் திடீர் திருப்பம்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…

10 minutes ago