“கைதுக்கு அஞ்சுபவன் நான் அல்ல…” காவிரிப் பிரச்சினையைத் திசைதிருப்ப நாடகம் போடுறீங்களா…? எனக்கு காமெடியா தான் இருக்கு…. உதயநிதி சர்ச்சை பேச்சு..!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆபாசமாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறக்கணித்தது தொடர்பாகவே தாம் பேசியதாகத் தெரிவித்த அவர், தான் பேசாத ஒன்றை எடிட் செய்து தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காவிரி நதிநீர்ச் சிக்கலைத் திசைதிருப்புவதற்காகவே இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியிருப்பதாக விமர்சித்த அவர், இந்த கைது நடவடிக்கையைத் தான் ஒரு நகைச்சுவையாகவே பார்ப்பதாகவும், சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார். மேலும், தானோ அல்லது தனது கட்சியின் கடைக்கோடித் தொண்டனோ சிறை தண்டனைக்கு அஞ்சப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் கைதானதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் திரண்டு தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.