“விரைவில் ஐட்டம் சாங் போடுவாங்க போல!” சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்.. உதயநிதி அதிரடி குற்றச்சாட்டு…!!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குட்டி கதை சொன்னது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தற்போதைய சட்டமன்றம் ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றப்பட்டுவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் செயல்பாடுகள் விஜய் பட ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பாணியில் இருப்பதாகவும், சட்டமன்றத்தையே ஒரு தியேட்டர் போல மாற்றிவிட்டதால் அங்கு விசில் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும் சாடினார். மேலும், அமைச்சர்கள் நடனமாடுவதும், சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே இவை செய்யப்படுவதாகவும், இன்றைய முதலமைச்சரின் பேச்சில் இருந்து மட்டுமே 10 ரீல்ஸ்கள் (Reels) தேறும் என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தது குறித்துப் பேசிய அவர், தங்களால் ஓரளவுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று விளக்கமளித்தார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அதற்கு சபாநாயகர் ‘ஆக்‌ஷன்’ சொல்கிறார் என்றும், இதே நிலை நீடித்தால் விரைவில் சட்டசபைக்கு கேரவேன் (Caravan) கூட வந்துவிடும் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், பேரவையில் விரைவில் ‘ஐட்டம் சாங்’ போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும், சபாநாயகரே ஆக்‌ஷன், கட் எல்லாம் சொல்லும் இயக்குநராக மாறிவிட்டார் என்றும் விமர்சித்தார்.

சட்டமன்றப் பேரவையை பொதுக்கூட்ட மேடையிலோ அல்லது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலோ பேசுவதைப் போல மாற்றிவிட்டதாகக் கூறிய உதயநிதி, அவர்கள் இஷ்டத்திற்குப் பேசுவதை எல்லாம் தாங்கள் சகித்துக்கொண்டு கேட்க முடியாது என்று தெரிவித்தார். “உங்களை யாராவது கெட்ட வார்த்தை பேசி கோபப்படுத்தினால் உங்களால் எப்படி அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருக்க முடியுமோ, அப்படித்தான் இதுவும்” என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய அவர், தங்களின் வெளிநடப்பு நியாயமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆவேசமாகப் பதிலளித்தார்.

Soundarya

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

3 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

13 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

23 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

35 minutes ago

“தனிமையில் காதலியுடன் உல்லாசம்…” பெண் குழந்தைக்கு தந்தை…! காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இறந்த இளம்பெண்… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…

40 minutes ago

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

49 minutes ago