திமுகவின் உட்கட்சி அரசியலில் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தேர்தல் களச் சூழல்களுக்குப் பிறகு, கனிமொழி மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி, அறிவாலயத்தில் கட்சித் தொண்டர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். இதே காலகட்டத்தில், “திமுகவின் அடுத்த தலைவரே கனிமொழிதான்” என்றும், “2031-ஆம் ஆண்டின் முதலமைச்சர் வேட்பாளர் கனிமொழி” என்றும் சமூக வலைதளங்களில் பல வீடியோக்களும் பிரச்சாரங்களும் தீயாகப் பரவி வருகின்றன.
இந்த வீடியோக்களின் திடீர் வருகை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் தரப்பு இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த சமூக வலைதளப் பிரச்சாரங்களின் பின்னணியில் கனிமொழியின் ஆதரவாளர்களே செயல்படுகிறார்கள் என்றும், திட்டமிட்டே இத்தகைய வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் உதயநிதி புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. உட்கட்சி வாரிசுப் போட்டி குறித்த விமர்சனங்கள் எழும் சூழலில், இந்த புதிய மோடல் விவகாரம் திமுக மேலிடத்திற்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
சோனிபட் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஆறு வயது சிறுமி, அருகே உள்ள நீர் தொட்டியில் சடலமாக…
டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம்…
ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…