திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன், அவருடைய நண்பர் தமிழரசன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமுறைவாக உள்ள பிரவீன், அஸ்வின் ஆகியோரே கொலை செய்ததாகவும் அவர்களுக்கு பைக் கொடுத்து தான் தாங்கள் உதவியாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
