கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் kpy பாலா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார் . இவர் இலவசமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.இப்போது ஹீரோவாக காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிக்கப்போகிறது . இந்நிலையில் பாலா ராகவா லாரன்ஸ்டன் சேர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார் . அதன்படி தற்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள இரும்பேடு கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் மாணவர்களின் முயற்சியால் மாற்றம் சேவை அறக்கட்டளை நிறுவனர் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் சமூக சேவர்களும் சின்னத்திரை நடிகருமான பாலா இருவரின் ஏற்பாட்டில் சுமார் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான கழிப்பறை கட்டப்பட்டது. இந்த திறப்பு விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா இருவரும் கலந்து கொண்டு கழிப்பறையை திறந்து வைத்தனர். அப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்கள் மத்தியில் பேசிய போது தாய் தந்தைகளை மதிக்க வேண்டும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.ராகவா லாரன்ஸ் மற்றும் kpy பாலாவின் இந்த சேவை பலருடைய பாராட்டுகளை பெற்றுவருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…