தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது அடுத்தடுத்த நிர்வாகிகளின் ‘நாத்தவறு’களால் சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில் தவெக வேட்பாளர் தமிழ்செல்வியை ஆதரித்து பிரச்சாரம் செய்த கட்சியின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், உரையின் இறுதியில் “தளபதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கூறி தொண்டர்களை அதிர வைத்துள்ளார். பல தசாப்தங்களாக அதிமுகவில் பயணித்துவிட்டு தவெக-வில் இணைந்த இவருக்கு, பழைய பழக்கத்தினால் வந்த இந்த வாய் தவறிய வார்த்தை, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தனது தவறை உடனே உணர்ந்த செங்கோட்டையன், “இரட்டை இலை சின்னத்திலேயே வாக்கு கேட்டு பழகிவிட்டேன்” என்று கூறி சமாளிக்க முயன்றாலும், அதற்குள் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அக்கட்சியின் தலைவர் விஜய் பல முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், பொறுப்பில் இருக்கும் ஒரு நிர்வாகியே மாற்று கட்சியின் சின்னத்திற்கு வாக்கு கேட்டது கட்சித் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “கோடிக்கணக்கில் செலவு செய்து பிரச்சாரம் செய்யும் போது, இவ்வளவு அலட்சியமாக செயல்படலாமா?” என்பதே விஜய் ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
தவெக நிர்வாகிகள் இது போன்ற குழப்பங்களில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக, கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகதான் வெற்றி பெறும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல, திருத்தணி வேட்பாளர் சத்தியகுமார், தமிழக வெற்றிக் கழகம் “2034 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று (மொத்தமுள்ள 234 தொகுதிகளை மறந்து) கூறியது பெரும் ட்ரோல்களுக்கு உள்ளானது.
தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தகைய குளறுபடிகள், கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகிகளின் முதிர்ச்சி குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. புதிய கட்சியாகத் தேர்தலைச் சந்திக்கும் தவெக-விற்கு, சின்னத்தை மக்களிடம் சரியாகக் கொண்டு செல்வது மிக அவசியமான ஒன்று. ஆனால், கட்சியின் முன்னணி முகங்களே பொது மேடைகளில் இப்படித் தடுமாறுவது, களத்தில் உழைக்கும் தொண்டர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதையெல்லாம் சரி செய்து தவெக வெற்றியைச் சுவைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…