ரஷ்யா – உக்ரைன் போரை விடவும் உலக நாடுகளின் கவனத்தையும், கவலையையும் ஈர்த்துள்ள ஈரான் – இஸ்ரேல் மோதல், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யப் போரால் இந்தியா போன்ற நாடுகளுக்கு குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே பாதிப்பு இருந்த நிலையில், ஈரான் மீதான இந்த போர் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் சமையலறை வரை எதிரொலிக்கிறது. குறிப்பாக எரிவாயு தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சாமானிய மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்தப் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், கடந்த 40 நாள் போருக்கான செலவுப் பட்டியலை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட மதிப்பீட்டின்படி, ஈரான் மற்றும் லெபனான் மீதான 40 நாள் போருக்காக சுமார் 17.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக 1,62,907.5 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது. இதில் நேரடி ராணுவச் செலவுகள் மட்டுமே 12.9 பில்லியன் டாலராகும். ராணுவ ஆயுதங்கள், போர் விமானங்களின் இயக்கம் மற்றும் வீரர்களுக்கான ஊதியம் என பெரும் நிதி போர்க்களத்தில் கரைந்துள்ளது. இது தவிர, போர்ச் சேதங்களைச் சீரமைக்க வேண்டிய புனரமைப்புச் செலவுகளைக் கணக்கிட்டால், இந்த இழப்பு இன்னும் பல மடங்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
போர் வெறும் ராணுவத்தோடு நின்றுவிடாமல், இஸ்ரேலிய பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. பொதுமக்கள் சார்ந்த சேதங்களுக்காக மட்டும் சுமார் 4.5 பில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 28,000-க்கும் மேற்பட்ட இழப்பீடு விண்ணப்பங்கள் இஸ்ரேல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையானவை கட்டிடச் சேதங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. டெல் அவிவ், அராத் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் போரினால் உருக்குலைந்துள்ளன, இது இஸ்ரேலின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் இந்த மோதல் எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களால், அந்நாட்டின் தினசரி உற்பத்தி 6 லட்சம் பேரல்கள் வரை குறைந்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் (SPA) உறுதிப்படுத்தியுள்ளது. பைப்லைன் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் அளவும் சுமார் 7 லட்சம் பேரல்கள் சரிந்துள்ளதால், உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த விநியோகச் சங்கிலி பாதிப்புதான் இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், அதன் தொடர்ச்சியாகப் பொருட்களின் விலை உயர்விற்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…
பாலிவுட் நடிகர் அன்னு கபூர், நடிகை தமன்னாவின் உடல் தோற்றம் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 'Aaj…
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேட்பாளர்களின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கும் நடைமுறை தொடங்கப்படும் என்று வருமான வரித்துறை (IT) சென்னை உயர்…
உலக அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டு வரும்…
பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின்…
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…