தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு எதிராக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் அமர்வுக்கு வந்த நிலையில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்டப் பணிகளை விஜய் செய்து வருகிறார்.
இந்நிலையில் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் ஆலோசனை நடத்தினார். இது விஜய் கரூர் செல்லும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சந்திக்கும் புதிய தேதியை ஓரிரு நாட்களில் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவிப்பார் என்று நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…