“மே மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும்”…. ஆர்.எஸ். பாரதி சொன்ன பகீர் கணிப்பு… தமிழக அரசியலில் புதிய புயல்…!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

திமுகவின் உள்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததும் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கும் என்றும், அதன்பின் தவெக அரசு கவிழும் என்றும் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; உள்கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வரும் மே மாதத்திற்குள் தமிழகத்தில் புதிய தேர்தல் வரும் என அதிரடியாகக் குறிப்பிட்டதோடு, ஒரு தேர்தலில் தோற்றுவிட்டதால் ஒரு இயக்கம் அழிந்துவிடாது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தவெக தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்ற தொனியில் திமுகவினர் தொடர்ந்து குரலெழுப்பி வரும் நிலையில், ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சு மாநில அரசியலில் புதிய விவாதங்களையும் களேபரத்தையும் கிளப்பியுள்ளது.