தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் அருண் ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்படுவதால், இவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தப் புதிய அமைச்சரவையில் சத்யபாமா, டாக்டர் பிரபு, மதுரை கல்லணை, நடிகர் ஸ்ரீநாத், தாஹிரா, ராஜ்மோகன், ECR சரவணன் மற்றும் விஜய் சரவணன் ஆகியோருக்கும் அமைச்சராகப் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு சமூக மற்றும் மண்டலப் பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்த அமைச்சரவைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ரீதியாக மிக முக்கியமான சபாநாயகர் பதவிக்கு, VS பாபு அல்லது JCD பிரபாகர் ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவைப் பதவிகளுக்கான பெயர்கள் அடிபடுவதால் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.
