விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி தான் இருக்கும். நான் ஐந்தாவது அணி அமைப்பதாக வெளியான தகவல் எதுவும் உண்மை இல்லை. கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னுடன் பேசி வருகின்றன. 2026 தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி என்று இதுவரை முடிவு செய்யவில்லை. விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளது.
விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் கூறுவதில் எந்த தவறும் கிடையாது. டெல்லியில் இருப்பவர்கள் அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாக நான் நினைக்கவில்லை. அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என டெல்லி பாஜகவினர் சமாதானம் செய்வதில் எந்த தவறும் கிடையாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் தற்போது விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என கூறியுள்ளது கூட்டணிக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
