தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு இன்னும் இரண்டு இடங்கள் மட்டுமே தேவைப்படும் சூழலில், அரசியல் களம் திடீர் திருப்பமாகப் போர்க்களமாக மாறியுள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநரிடம் அளித்துள்ள அதிரடிப் புகாரில், தவெக தலைவர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான இடங்களைப் பிடிக்க மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்.எல்.ஏ. காமராஜைத் தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாகவும் தினகரன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இது திட்டமிட்ட “ஜனநாயகப் படுகொலை” என தினகரன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை வரை சென்றுள்ளதால், பதவியேற்புக்கான சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது.
ஏற்கனவே விசிக-வின் ஆதரவு கடிதத்திற்காகக் காத்திருக்கும் நிலையில், தற்போது எழுந்துள்ள குதிரை பேரப் புகாரும், எம்.எல்.ஏ. மாயமான விவகாரமும் தமிழக அரசியலில் பெரும் மர்மத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு இடத்திற்குத் தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தப் புகாரால் ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் விஜய் முதல்வராகப் பதவியேற்பதில் மீண்டும் முட்டுக்கட்டைகள் உருவாகியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிரட்டலான திருப்பமாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் நிலவும் இழுபறி, தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை…
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் தனது வலிமையை இழந்து 'நீசம்' பெறுவது பொதுவாகப் பலவீனமாகக் கருதப்படுகிறது. ஆனால், அந்தப் பலவீனம்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்எல்ஏ காமராஜ் விவகாரம், தற்போது 'வீடியோ' ஆதாரத்தால் புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. அமமுக…
தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…