“துணை முதல்வர் பதவி மட்டுமல்ல.. திருமாவளவன் போட்ட 4 அதிரடி கண்டிஷன்கள்”… அரண்டுபோன விஜய்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் ஒரு எம்எல்ஏ-வின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் பலம் 117-ஆக உயர்ந்துள்ள நிலையில், தலா இரண்டு எம்எல்ஏ-க்களை வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு தற்போது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. திருமாவளவனின் ஆதரவு கிடைத்தால் விஜய் எளிதாக அரியணை ஏற முடியும் என்பதால், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் விசிக-வின் இன்றைய அறிவிப்பை நோக்கி நகர்ந்துள்ளது.

ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று உயர்மட்டக் குழுவினருடன் ஜூம் மீட்டிங் நடத்திய திருமாவளவன், விஜய்யிடம் நான்கு அதிரடியான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதன்மையானது, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் விசிக-வுக்குப் பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். குறிப்பாக, தமக்குத் துணை முதல்வர் பதவியும், கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவியும் வழங்கப்பட வேண்டும் எனத் திருமாவளவன் டிமாண்ட் வைத்துள்ளார். இந்த நிபந்தனை தவெக தரப்பைச் சற்றுத் திக்குமுக்காடச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு முக்கிய நிபந்தனையாக, தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் ஆறு மாதத்திற்குள் எம்எல்ஏ-வாக வேண்டும். இதற்காக விஜய் வெற்றிபெற்ற தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கை ராஜினாமா செய்து, அந்த இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட தவெக வழிவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், காலியாகும் சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விசிக வேட்பாளரைத் தவெக ஆதரிக்க வேண்டும் என்பதோடு, பட்டியலின மக்களின் நல்வாழ்வுக்கான பிரத்யேகச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்ற கொள்கை ரீதியான கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

இந்தக் கடுமையான டிமாண்டுகளைக் கேட்டு தவெக தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசிக-வுக்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்கத் தயாராக இருக்கும் விஜய், துணை முதல்வர் பதவியை வழங்கத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஒரு எம்எல்ஏ ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், திருமாவளவன் கேட்கும் இவ்வளவு பெரிய அதிகாரப் பங்கீட்டை ஏற்பதா வேண்டாமா என்ற இழுபறி நீடிக்கிறது. இன்று காலை திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி மலருமா அல்லது அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

“பணக்காரர்களை விட பெரிய மனசு” காசு இல்ல ஆனா மனசு இருக்கு… ஐந்து தெரு நாய்களுடன் ரிக்சாவில் வலம் வரும் முதியவர்.. இணையத்தை நனைய வைத்த வீடியோ..!

தன் சொற்ப வருமானத்திலும் கருணை உள்ளத்தோடு ஐந்து தெரு நாய்களை அரவணைத்துச் செல்லும் ஒரு முதியவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக…

4 seconds ago

“டெய்லி வெறும் 20 ரூபாய் போதும்!… ₹1,00,000 உங்கள் கையில்… நடுத்தர மக்களுக்காகவே உருவான எஸ்பிஐ-யின் அசத்தல் திட்டம்”…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வழங்கும் இந்த ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம், சாமானிய மக்களும் சிறுகச் சிறுகச்…

2 minutes ago

BREAKING: தமிழக அரசியலில் உச்சகட்ட த்ரில்லர்… 5 நாட்களாக நீடிக்கும் முதல்வர் இழுபறி…. இபிஎஸ்-ஸின் அடுத்த அதிரடி மூவ்…!

தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி ஐந்து நாட்களாகியும் அடுத்த முதல்வர் யார்…

4 minutes ago

“விஜய் CM ஆக மாட்டார்!”… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்… பரபரப்பை கிளப்பும் பதிவு….!

பாஜகவின் திருச்சி சூர்யா தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

7 minutes ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!… அடிப்படை ஊதியம் ரூ. 69,000-ஆக உயர்கிறதா?…8-ஆவது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8-ஆவது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் தற்போது வேகமெடுத்துள்ளன. குறிப்பாக,…

13 minutes ago

“பொறுத்தது போதும்.. பொங்கி எழுந்த திரிஷா..!” வதந்தி பரப்புபவர்களுக்கு கொடுத்த மரண மாஸ் பதிலடி..!

திரிஷா குறித்துச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் வெளியிட்டுள்ள ஆவேசமான பதிவு குறித்து…

17 minutes ago