ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு….. கே.என். நேரு A1 குற்றவாளி?…. எஃப்.ஐ.ஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்….!

By Nanthini on புரட்டாதி 13, 2026

Spread the love

ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சர் K.N. நேருவின் பெயர் முதல் குற்றவாளியாக (A1) சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை (ED) அளித்த தகவல்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (V&AC) இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இம்மாபெரும் நிதி முறைகேடு தொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, லஞ்ச ஒழிப்புத்துறை வசம் உள்ள வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்தி வருவதால், இவ்வழக்கின் பிடி இறுகியுள்ளது. ஆவணங்கள் கைமாறும் பட்சத்தில், விசாரணை மற்றும் விசாரணை அமைப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக K.N. நேரு கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.