காட்டில் விடிய விடிய நிர்வாணமாக, உடல் முழுவதும் காயங்களுடன்…. பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்… நாட்டையே நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் மெதக் மாவட்டம் அப்பாஜி பள்ளி என்ற கிராமத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமான காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு பெண் நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் வலி தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

உடனே இது குறித்து தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் உறவினர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். முதல் கட்ட விசாரணையில் காட்டில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்தது பழங்குடியின பெண் என்றும், அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அவருடன் யாரோ சிலர் பேச்சு கொடுத்து காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

   

அங்கு சேலையால் மரத்தில் கட்டி வைத்ததுடன் அவரை நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதில் தீவிர காயம் அடைந்த அந்தப் பெண் விடிய விடிய இரவு முழுவதும் நிர்வாணமாகவும் காயங்களின் வலியுடனும் உணவில்லாமல் உயிருக்கு போராடியுள்ளார். மறுநாள் கிராம மக்கள் பார்த்த பிறகு மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரிதாபமாக உயிரிழந்தார். பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிகளை போலீசார் தற்போது வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.