மாடர்ன் உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். பிறந்த குழந்தைக்கு கூட பெற்றோர் ரீல்ஸ் போட்டு காண்பிக்கின்றனர் . likes,view’s-காக பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஒரு சிலர் ஓவர் நைட்டில் பிரபலம் ஆகிடுறாங்க.
அதிலும் ஒரு சிறுவன் கையில் ரப்பரை போட்டுக்கொண்டு மேஜிக் செய்வது போல காண்பித்து ஹே எப்புட்றா..! என்று கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. அந்த வீடியோவை பார்த்த பலரும் அதேபோல ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.
அந்த சிறுவனை கூப்பிட்டு பிரபல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தன. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அதே சிறுவன் ஹே எப்புட்றா என்ற வீடியோவை பேசி வெளியிட்டுள்ளான். முன்பு பார்த்ததைவிட சிறுவன் சற்று வளர்ந்துள்ளான். இதனை பார்த்த பலரும் அந்த சிறுவனா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram