பிரபல சின்னத்திரை நடிகை சுபாஷினி, சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வாடகை வீட்டில் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 வயதான அவர், பெங்களூருவில் வசிக்கும் தனது கணவர் பிபின் சந்திராவிடம் வீடியோ காலில் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இது குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கான பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத பிபின் சந்திரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. “உன்னைப் போல் என்னை யாரும் நேசித்ததில்லை, உன்னுடன் சேர்ந்து வாழவும் பயணங்கள் செல்லவும் பல கனவுகள் கண்டேன், ஏன் என்னை விட்டுப் போனாய் பேபி?” என அவர் பதிவிட்டுள்ள கண்ணீர் வரிகள் காண்போரை கலங்கச் செய்துள்ளது. சுபாஷினியின் மறைவுக்கு சின்னத்திரை கலைஞர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…