சினிமா பாணி சேஸிங்: ஓடும் ரயிலில் இருந்து குதித்த திருடன்.. 5 மணிநேரம் குளத்திற்குள் நடந்தது என்ன?… போலீசாரையே அதிரவைத்த “தாமரை தண்டு” ரகசியம்….!

Spread the love

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணிடம் கைவரிசை காட்ட முயன்ற திருடன், போலீசாரிடம் இருந்து தப்பிக்க சினிமா பாணியில் குளத்தில் குதித்து 5 மணிநேரம் பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் அருகே ரேவா – இத்வாரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் பயணித்த பெண்ணின் பையை பறிக்க முயன்ற 42 வயதான ஹர்விந்தர் சிங் என்ற சன்னி, ரயில்வே போலீசார் தன்னை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சிஹோரா சாலை அருகே இருந்த குளத்தில் குதித்து தலைமறைவானார்.

அதிகாலை 5.15 மணிக்கு குளத்தில் குதித்த நபரைத் தேடி தீயணைப்புத் துறையினரும், நீச்சல் வீரர்களும் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். பாசி படர்ந்து காணப்பட்ட அந்த குளத்தில் நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால், அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். இருப்பினும் விடாமல் தேடியதில், சுமார் 5 மணிநேரத்திற்குப் பிறகு காலை 10.30 மணியளவில் அந்த நபர் உயிருடன் பிடிபட்டார். தண்ணீருக்குள் நீண்ட நேரம் மூச்சடக்கி அவர் எப்படி உயிர் பிழைத்தார் என்பது போலீசாருக்கே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், தாமரை தண்டுகளைப் பயன்படுத்தி அவர் சுவாசித்தது தெரியவந்தது. தாமரை தண்டுகள் உட்புறம் குழாய் போன்ற துளைகளைக் கொண்டவை என்பதால், தண்ணீருக்கு அடியில் பதுங்கியிருந்தவாறே அந்த தண்டின் ஒரு முனையை வாயில் வைத்துக்கொண்டு, அதன் வழியாக மேலிருந்து காற்றை இழுத்து சுவாசித்துள்ளார். ஒரு நவீன ‘ஸ்நோர்க்கெலிங்’ (Snorkeling) கருவி போல தாமரை தண்டை பயன்படுத்தி போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்க அவர் மேற்கொண்ட இந்த வினோத முயற்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைது செய்யப்பட்ட ஹர்விந்தர் சிங் மீது ஏற்கனவே பல மாநிலங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக 2018-ல் விசாகப்பட்டினத்தில் ஒரு ரயிலில் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களை திருடியதில் இவருக்குத் தொடர்பு உள்ளது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க மூன்று மாதத்திற்கு ஒருமுறை தனது திருட்டுப் பாதையை மாற்றும் வழக்கம் கொண்ட இவர், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் இயற்கையை தவறான வழிக்கு பயன்படுத்திய இந்த ‘தாமரைத் தண்டு’ திருடனின் கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

9 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

15 minutes ago

BREAKING: திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…

17 minutes ago

“50 காயங்கள், சிகரெட் சூடுகள்”… ஒன்றரை வயதுப் பிஞ்சு குழந்தையின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் அறிக்கை… தாய் மற்றும் காதலன் கைது…!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…

22 minutes ago

“One Felt Nice, We Did It Twice” மைதானத்தில் பறக்கும் முத்தம்.. ஆர்சிபியின் வரலாற்று வெற்றியைக் கொண்டாடிய விராட் – அனுஷ்கா ஜோடி..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…

27 minutes ago

BREAKING: விவசாயிகள் கைது… விஜய் அரசுக்கு பெரும் பின்னடைவு…!!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…

32 minutes ago