பெங்களூரை சேர்ந்த சூரஜ் சிவண்ணா மற்றும் கான்வி தம்பதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேன்நிலவுக்காக இலங்கை சென்ற இவர்கள் இடையே திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு பாதியிலேயே நாடு திரும்பி உள்ளனர். இதனிடையே புகுந்த வீட்டில் நேர்ந்த அவமானங்களால் மனம் உடைந்த புதுமணப்பெண் கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த வரதட்சணை கொடுமை புகாரி அடிப்படையில் சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண்ணின் உறவினர்கள் வீட்டின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தியதால் சூரஜ் மற்றும் அவருடைய தாய் ஜெயந்தி ஆகியோர் அங்கிருந்து தப்பி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்த சூரஜ் கடந்த சனிக்கிழமை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தற்கொலைக்கு முயன்ற அவருடைய தாய் ஜெயந்தி தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தேன்நிலவு சென்ற தம்பதி அடுத்தடுத்த நாட்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…