டிரம்ப் போட்ட ‘ட்வீட்’.. 20 நிமிடத்தில் 840 கோடி லாபம் பார்த்த மர்ம டிரேடர்… உலகமே பதறிய அந்த தருணம்….!

Spread the love

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரு சமூக வலைதளப் பதிவு உலகப் பொருளாதாரத்தையே ஒரு நொடி உலுக்கியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்ததோடு, டிரம்ப் தனது பதிவையும் நீக்கினார். ஆனால், இந்தச் சிறு இடைவெளியில் சந்தையில் நடந்த மாற்றங்கள் யாரோ ஒரு மர்ம நபரைச் சில நூறு கோடிகளுக்கு அதிபதியாக்கியுள்ளது.

டிரம்ப் அந்தத் தகவலைப் பதிவிடுவதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பே, அமெரிக்கப் பங்குச்சந்தையில் அசாதாரணமான வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. திங்கட்கிழமை காலை நியூயார்க் சந்தை தொடங்குவதற்கு முன்பே (Pre-market), சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கச்சா எண்ணெய் ஒப்பந்தங்கள் கைமாறின. வழக்கமான வர்த்தகத்தை விட இது நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாகும். டிரம்ப் என்ன சொல்லப்போகிறார் என்பது அந்த மர்ம நபருக்கு முன்பே தெரிந்திருந்தது போல இந்த முதலீடுகள் அமைந்திருந்ததுதான் இங்கு ஆச்சரியமான விஷயம்.

முக்கியமாக இரண்டு பெரும் ‘டிரேட்கள்’ இதில் நடந்துள்ளன. ஒன்று, போர் நின்றால் பங்குச்சந்தை உயரும் என்பதைக் கணித்து 12,600 கோடி ரூபாய் மதிப்பிலான S&P 500 ஃபியூச்சர்ஸ் வாங்கப்பட்டன. மற்றொன்று, கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்த்து 1,615 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் விற்கப்பட்டன. சரியாக அவர் கணித்தது போலவே, டிரம்பின் அறிவிப்பு வந்த 20 நிமிடங்களுக்குள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. இதன் மூலம் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் சுமார் 840 கோடி ரூபாய்க்கும் மேல் ($100 மில்லியன்) லாபம் ஈட்டியுள்ளார்.

இவ்வளவு துல்லியமாக டிரம்பின் அறிவிப்புக்கு முன் முதலீடு செய்யப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் டிரம்பின் ஆட்சியில் அவ்வப்போது நடப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்னரும் வெனிசுலா அதிபர் விவகாரத்தில் ஒரு நபர் இதேபோலப் பெரிய லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ‘இன்சைடர் டிரேடிங்’ (Inside Trading) புகார்கள் குறித்து வல்லுநர்கள் விவாதித்து வரும் நிலையில், அந்தப் பெரும் தொகையை அள்ளிய மர்ம நபர் யார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது.

Nanthini

Recent Posts

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

6 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

14 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

25 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

29 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

36 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு எதிராக நடிகை சொர்ணமால்யா வெளியிட்ட அதிரடி வீடியோ… அதுக்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்…!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…

41 minutes ago