சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான அபிஷன் ஜீவந்த் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமுமே இயக்குனரை பாராட்டி வருகிறது. சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் அபிஷனை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். அதனைத் தவிர பிரபலங்கள் பலரும் இயக்குனரை தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் அழுத்தமான கதைக்களத்தை கொண்டுள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களின் பாராட்டை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் இந்த இயக்குனரின் படத்தில் அடுத்ததாக நடித்த பிரபல நடிகர்கள் இருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேறு யாரும் இல்லை தனுஷ் மற்றும் சிம்பு தான். தென்னிந்திய சினிமாவிலயே பிசியான நடிகராக இருக்கும் தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என ஒரு ஆல் ரவுண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் மறுப்பக்கம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா பட வேலைகளிலும் பிசியாக உள்ளார். அது மட்டுமல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோ பிக், போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக உள்ளார். அதனைப் போலவே சிம்புவும் தற்போது தக்லைப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.
![]()
இப்படியான நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் ஒரு சில வரிகளில் கதையை கூற இந்த கதை தனுஷ் மற்றும் சிம்பு இருவருக்குமே பிடித்து விட சீக்கிரம் இதற்கான முழு கதையை தயார் பண்ணுங்க நடிப்பதற்கு நாங்க தயாராக இருக்கோம் என்று இருவருமே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அடுத்த படத்தில் இவர்களில் யார் இணைவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.
