பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் அட்டை என்ற இந்த குடும்ப அட்டையை பயன்படுத்தி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய பல நிதி உதவிகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கிறது. எனவே ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் 11 அதாவது நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். அதே சமயம் ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டவருக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் இந்த முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…
தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…
கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…