தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டணம் 10 ரூபாய் செலுத்தி இன்று முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 4ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
