குஷியோ குஷி… தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 29, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களை பொறுத்து அந்தந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி ராஜராஜ சோழனின் 1040 ஆவது சதய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் 7 ஒன்றியங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.