தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நகரமான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற விளங்குகிறது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தவிர தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திற்கு மேலும் பல நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் தமிழ்நாடு வளர்கிறது என்ற மூன்றாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சுமார் 43,844 கோடி முதலீட்டில் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், சமீபத்தில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று விஸ்வரூப தரிசனம் செய்தார். பொதுவாக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது, அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக அரசியலில் நிலவி வந்த 59 ஆண்டுகால திராவிட சித்தாந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் தலைமையிலான…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு…