தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள நிலையில், விழாவுக்கான முன்னேற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பதவியேற்பு விழாவைக் காணத் தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் ஆவலுடன் காத்திருப்பதால், சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, வரும் மே 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். தற்போது விஜய்யின் தலைமைக்கு 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு எளிதில் வெற்றி பெற்று தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் பேசப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் 'ஸ்பீட் கியூபர்' மிகக் குறுகிய காலத்தில் ரூபிக் கியூபைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியது. இதுகுறித்துப் பதிவிட்டுள்ள திமுக…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் இரண்டு சகோதரர்கள், தங்களது ஒரே சகோதரிக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையிலான ஒரு…
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில்,…
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கார்த்திக், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் சொத்து விவரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயக…