கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு முதலமைச்சர் விஜய் அரசுப்பணி வழங்குவதை மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஏற்க வேண்டும் என்றும், அரசின் இந்த உதவிக்கரத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும், சமீபத்தில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் இருந்து தமகா விலகியுள்ள சூழலில், வாசனுடைய இந்த ஆதரவு அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இணைவதற்கும், அக்கட்சியுடன் ஒரு சுமுகமான அரசியல் உறவை ஏற்படுத்துவதற்கும் அடித்தளம் அமைக்கும் வகையிலேயே ஜி.கே.வாசன் இவ்வாறு தவெக அரசின் திட்டத்தைப் பாராட்டிப் பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் மற்றும் விமர்சகர்கள் பரவலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…
ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…
புதுச்சேரியில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் போலி மருந்து தயாரிப்பு கும்பல்களின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.…
'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச்…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போது குழந்தைகளையும், சிறுவர்களையும் ஈர்க்கும் வகையில் தலைவர்கள் பேசுவது புதிய விஷயம் அல்ல.…
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மருத்துவக் கனவுகளுடன் எழுதப்பட்ட நீட் தேர்வு, நடப்பாண்டில் அடுத்தடுத்து அரங்கேறிய குளறுபடிகளால் பெரும் சர்ச்சையைச் சந்தித்துள்ளது.…