‘மன்னர் வகையறா’ திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் அளித்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறு குறு வழக்குகளுக்கான நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தும், கடனைத் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விமல் தரப்பில், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன், அவருக்கு 30 நாட்கள் இடைக்கால ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…
ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…