“எனக்கே துரோகம் பண்ணிட்டியே டா”… நண்பன் மனைவியுடன் உல்லாசம்… சுடுகாட்டில் வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி… திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 5, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விமல் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விமலின் நண்பர்களான சிவா, விக்கி, விஜி, பிரவீன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோர் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விமல் சிவாவின் மனைவியுடன் தகாத உறவில் இருந்தது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிவா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து விமலையை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து பிறகு கொடூரமாக வெட்டி கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை திருக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்த பிறகு காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.