“நீ ஊதுபத்தி கலரில் அசிங்கமா இருக்க”… அடுத்த நொடியே எரியும் தீயில் விழுந்த மாணவன்… கதறியபடி தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

Spread the love

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனை சக மாணவர்கள் அவனது நிறத்தைக் கேலி செய்து, “நீ ஊதுபத்தி கலரில் இருக்கிறாய்” என்று வன்கொடுமை இழைத்ததாகவும், கை கால்களைப் பிடித்து எரியும் குப்பைக் குழியில் தள்ளியதாகவும் அந்த மாணவனின் தாய் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தாய் அளித்த புகாரில், தனது மகன் கருப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டி வந்ததாகவும், திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் வேறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த சிறுவனும் மற்ற மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும், விளையாடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒருவரையொருவர் தூக்கி ஆட்டி விளையாடியபோது, நிலைதடுமாறி சிறுவன் குப்பைக் குழியில் விழுந்ததாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சாதிய பாகுபாடோ அல்லது உள்நோக்கத்துடன் கூடிய தாக்குதலோ இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காயமடைந்த சிறுவனுக்குச் சக மாணவர்களே முதலுதவி செய்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

20 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

26 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

30 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

51 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

54 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

59 minutes ago