தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த நிலையில் மாநாடு திரைப்படம் மூலமாக கம்பேக் கொடுத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. நடிகர் சிம்புவின் கரியரில் முதல் முறையாக 100 கோடி வசூலித்த திரைப்படமும் இதுதான். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல என அவர் கடைசியாக நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது. இப்படியான சூழலில் அவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் தக் லைஃப். மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் சிம்புவும் கமல்ஹாசனுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது. இப்படியான நிலையில் இந்த படத்தின் மீது இருந்த நம்பிக்கையால் அதன் பிறகு கமிட்டான படங்களுக்கு சம்பளம் வாங்காமல் சிம்பு அட்வான்ஸ் மட்டும் வாங்கியுள்ளார். ஏனென்றால் தக் லைஃப் வெற்றியடைந்தால் சம்பளத்தை அதிகரித்து விடலாம் என்று ஐடியாவில் அவர் இருந்துள்ளார். ஆனால் அவர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது தக் லைஃப் படத்தின் ரிசல்ட். இதனால் சம்பளத்தை அதிகரிக்க முடியாத நிலைக்கு சிம்பு தள்ளப்பட்டுள்ளார். தக் லைஃப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு 30 கோடி சம்பளம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…