பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அப்படி பார்ப்பவர்களையே மிரட்டி ஓட விடும் அளவிற்கு பாம்பிடம் விஷத்தன்மை இருக்கிறது. பாம்பு கடித்தால் இறந்து விடுவோமோ என்ற பயம் எல்லோரிடமே இருக்கும். அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் வீட்டிலோ அல்லது வீட்டில் இருக்கும் தொட்டிகளில் சில சிறப்பான செடிகளை வளர்த்து வருவதால் அந்த வாசனைக்கு பாம்பு வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம். அதோடு சிறுவர்கள் ஓடி விளையாடும் வசதி இருப்பவர்கள் இந்த செடிகளை கட்டாயம் வளர்க்க வேண்டும். அந்த வகையில் எந்த மாதிரியான செடிகளை வீட்டில் வளர்ப்பதால் பாம்பு வராது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி சர்பகந்தா என்ற மூலிகை செடியின் வாசனை மிகவும் விசித்திரமானதாக இருக்கும். பாம்புகள் அதனை மனக்க ஆரம்பித்த உடன் ஓடிவிடுகிறது. பார்ப்பதற்கு மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் பாம்புகள் இந்த செடியின் பக்கத்தில் வராது. புடலங்காய் செடியின் வாசனையை பாம்புகளால் நுகர முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் பாம்புகளுக்கு இந்த வாசனை பிடிக்காது. இந்த செடியை முற்றம், பால்கனி அல்லது பிரதான வாயிலும் வைக்கலாம்.
சாமந்திப்பூவில் இருந்து வரும் வாசனையை பாம்புகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அத்தகைய சூழ்நிலையில் பாம்புகள் அதன் நறுமணத்திலிருந்து ஓடிவிடுகிறது. முள் கற்றாழை செடி பாலைவனங்களில் காணப்படுகிறது. இந்த செடியில் முள் இருப்பதன் காரணமாக பாம்புகள் அதை சுற்றி திரிவதை விரும்பாது. இதனை வீட்டு தோட்டங்களில் வளர்க்கலாம்.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…