“என் உயிருக்கு ஆபத்து”… கதறும் எம்.எல்.ஏ… மதுரையில் சட்டென மாறிய அரசியல் சூழல்… நள்ளிரவில் பறந்த பரபரப்பு மனு….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்வுகளின் போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் நிலுவையில் உள்ள முன்விரோதம் காரணமாகச் சிலர் இடையூறு ஏற்படுத்த முயல்வதாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் கூறி உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதியாகத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும்போதும், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும்போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், தமக்குத் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.