பீகார் மாநிலம் ஒரு கிராமத்திற்கு அருகிலுள்ள நெல் வயலில் சுமார் 4 அடி நீளமுள்ள முதலை ஒன்று ஊர்ந்து திரிவதைக் கண்ட கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்குள், மக்களின் பாதுகாப்பைக் கருதி அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த முதலையை லாவகமாகப் பிடித்தனர்.
முதலையைப் பிடித்ததும் அங்கிருந்த ஒரு தைரியமான வாலிபர், அதை எவ்வித பயமும் இன்றி தன் தோளில் சுமந்து கொண்டு நேராக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றார். இந்த ஆச்சரியமான காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலானதுடன், அந்த வாலிபரின் துணிச்சலை நெட்டிசன்கள் பலரும் “பீகார் காரர்களை சாதாரணமாக இடைபோட முடியாது” எனப் பாராட்டிப் பேசி வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்த கிராமவாசிகளின் இந்த உடனடி நடவடிக்கையை வனத்துறை அதிகாரிகள் பெரிதும் பாராட்டினர். அதன்பின்னர், கிராம மக்களிடமிருந்து முதலையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், அதை கிராமத்திற்கு அப்பால் உள்ள பாதுகாப்பான ஆற்றுப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
