அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பேருந்து ஓட்டுநரான விஜய்யும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தேவியும் தங்களுக்குள் இருந்த தகாத உறவு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த ஒரு வருடமாகப் பலமுறை ஊரை விட்டு ஓடிப்போன இந்த ஜோடியைப் போலீசார் மீட்டு அறிவுரை கூறி தனித்தனியாகப் பிரித்து வைத்தனர்.
இருப்பினும், 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஊருக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருவரும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலங்கள் மிகவும் அழுகியநிலையில் இருந்ததால், சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சடலங்களின் பையில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர்கள் விஜய் மற்றும் தேவி என்பதை உறுதி செய்தார். ஆசைக்காகத் தங்கள் பிஞ்சு குழந்தைகளையும், வாழ்க்கை துணைகளையும் தவிக்க விட்டுவிட்டு ஓடிய இந்த ஜோடியின் முடிவு, தற்போது குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அளித்த நேர்காணல் ஒன்றில், தமிழக அரசியல் சூழல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருவேறு குழுக்களாகப் பேரவைக்குச் சென்றது அக்கட்சியினரிடையே பெரும்…
இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே…