ரயில் பயணிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்..! வெயிட்டிங் லிஸ்ட் கொடுமை.. ஸ்லீப்பர் கிளாஸில் மட்டும் 3.39 கோடி டிக்கெட்டுகள் ரத்து – RTI கொடுத்த ஷாக்…!

Spread the love

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.39 கோடி பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பின் தீவிரத்தை நேர அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 64 பயணிகள் தங்களது ரயில் பயண வாய்ப்பை இழக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பயணிக்கும் மேலாக ரயிலில் செல்ல முடியாமல் போகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 92,877 பயணிகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கும் ஸ்லீப்பர் கிளாஸ் பிரிவில்தான் அதிகபட்சமாக 1.68 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 3-ஏசி பிரிவில் 74.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில் நிலவும் அதீத தேவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது

Swetha

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

8 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

8 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

8 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

8 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago