ரயில் பயணிகளுக்குப் பெருத்த ஏமாற்றம்..! வெயிட்டிங் லிஸ்ட் கொடுமை.. ஸ்லீப்பர் கிளாஸில் மட்டும் 3.39 கோடி டிக்கெட்டுகள் ரத்து – RTI கொடுத்த ஷாக்…!

Spread the love

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளில், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாவிட்டால், அவை தானாகவே ரத்து செய்யப்பட்டுவிடும். அந்த வகையில், கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் சுமார் 3.39 கோடி பயணிகளின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பின் தீவிரத்தை நேர அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் சராசரியாக 64 பயணிகள் தங்களது ரயில் பயண வாய்ப்பை இழக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பயணிக்கும் மேலாக ரயிலில் செல்ல முடியாமல் போகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 92,877 பயணிகள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயணிக்கும் ஸ்லீப்பர் கிளாஸ் பிரிவில்தான் அதிகபட்சமாக 1.68 கோடி டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 3-ஏசி பிரிவில் 74.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை மற்றும் கோடை விடுமுறை காலங்களில் நிலவும் அதீத தேவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது

Swetha

Recent Posts

வெடித்தது மோதல்..! ஸ்டாலினை தோற்கடிக்க எனக்கு அங்கீகாரம் கிடையாதா..? தவெக MLA வி.எஸ். பாபு அதிருப்தி..!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில்…

7 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… முதலமைச்சரை தோற்கடித்த வரலாறு!… ஆனால் இப்போது அங்கீகாரம் எங்கே?.. அதிருப்தியில் வி.எஸ்.பாபு… தவெக-வில் நடப்பது என்ன?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வி.எஸ்.…

7 minutes ago

“பெங்களூரு பங்களாவில் பயங்கரம்!… நாய்களைப் பராமரிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தொழிலதிபர் செய்த வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பின்னணி”…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது பங்களாவில் வேலை செய்து…

17 minutes ago

குஷியோ குஷி..! பெண்களுக்கு மாதம் ரூ.2500.. வெளியானது புதிய அப்டேட்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் முதல்வர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு…

21 minutes ago

“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

23 minutes ago

பகீர்!.. கோவிலுக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 10 வயது சிறுவனை கொன்று தின்ற சிறுத்தை.. கதறும் பெற்றோர்…!!!

கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில், சிறுத்தை தாக்கியதில் 10 வயது…

30 minutes ago