மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்த 18 லட்சம் பேருக்கு ரூ.1,000 எப்போது கிடைக்கும் என்ற காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. தகுதியானவர்களுக்கு இரண்டு மாதங்களில் பணம் டெபாசிட் செய்யப்படும் என உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், பொங்கல் பரிசாக டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் வழங்க அரசு முழுவீச்சில் வேலை நடந்து வருகிறதாம்.
