தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது சாலையோரக் கடைகளில் இருந்த பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.
பிரச்சாரத்தின் போது அங்கிருந்த ஒரு தேநீர் கடைக்குச் சென்ற முதலமைச்சர், அங்கேயே அமர்ந்து தேநீர் அருந்தினார். இந்த நிகழ்வைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “திமுகவையும் டீக்கடைகளையும் பிரிக்கவே முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். டீக்கடைகள்தான் அரசியலையும் உலக நடப்புகளையும் மக்கள் அறிந்து கொள்ளும் இடமாகவும், திமுக வளர்ந்த இடமாகவும் விளங்குவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், டீக்கடைகள், சைக்கிள் கடைகள் மற்றும் முடி திருத்தகங்கள் ஆகியவை திமுகவின் ‘அதிகாரப்பூர்வமற்ற கிளைக் கழகங்கள்’ (Unofficial branch offices) என்று அவர் வர்ணித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் தேநீர் கடைப் பிரச்சாரம் திருச்சி பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து நர்ஸ் ஒருவர் வெளியிட்ட வெறுப்புணர்வைத் தூண்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…
திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர்…
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றது முதலே, தலைமைச் செயலகம் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில்…
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், வாக்காளர்களுக்கு நேரில் நன்றி…