Categories: சினிமா

தில்லானா மோகனாம்பாள் கதைக்கு இப்படி ஒரு டிமாண்ட் இருந்ததா? நாவலாசிரியருக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை..

Spread the love

சிவாஜி கணேசனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள். அதே பெயரில் வெளியான நாவலை தழுவி இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஏ பி நாகராஜன். இந்த படம் உருவானக் கதையே மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

நாவல் ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்பு 1957 – 58 இல் ஆனந்த விகடனில் தில்லானா மோகனாம்பாள் கதையை எழுதினார். வாராவாராம் வரும் தொடர்கதை. கதைக்களம் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் அதிகமாக வாழ்ந்து வந்த  தேவரடியார் பெண்களின் வாழ்க்கையும் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக இருந்தது.

இந்த தொடருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியால் அதனை படமாக்க ஆனந்த விகடன் நிறுவனரும் ஜெமினி ஸ்டுயோஸ் அதிபருமான எஸ்எஸ் வாசன் விரும்பினார். அதற்காக கதை உரிமையை எழுத்தாளரிடம் இருந்து பெற்று வைத்திருந்தார். இதே நாவலை படமாக்க இயக்குனர் ஏ.பி.நாகராஜன் விரும்பி கதை உரிமை கேட்ட போது அவர் வாசன் தர மறுத்துவிட்டார். ஆனால் ஏனோ அவராலும் அந்த படத்தை உருவாக்க முடியவில்லை.

இதனால் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏ பி நாகராஜன் அந்தக் கதை உரிமையைக் கேட்ட போது அதைக் கொடுக்க எஸ் எஸ் வாசன் சம்மதித்துள்ளார். ஆனால் கதை உரிமைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அப்போது ஒரு கதைக்கு 25 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. ஆனாலும் தயங்காமல் அதைக் கொடுத்துள்ளார் ஏ பி நாகராஜன். ஆனால் அவர் அதோடு நிற்கவில்லை.

அந்த நாவலை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்து அவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அதை வாங்க மறுத்த கொத்தமங்கலம் சுப்பு “உங்களிடம் வாங்கிய 25 ஆயிரம் ரூபாயையும் வாசன் அவர்கள் என்னிடமே கொடுத்து விட்டார். அதனால் எனக்கு உங்கள் பணம் வேண்டாம் எனக் கூறியுளார். அதன் பிறகு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் உருவாகி 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் பெற்றது.

vinoth

Recent Posts

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

3 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

6 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

8 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

21 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

23 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

23 minutes ago